Posts

Showing posts from April, 2022

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது

Image
அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது  இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.  ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது  பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் ஒரு செழுமையான கேட்டலா

Payanigal Gavanikkavum Movie Review:

Image
Payanigal Gavanikkavum Movie Review:   In the direction of Shakthivel Perumalsamy the film explicit the consequences of individual perspective made someone's life upside-down, the director auxiliary the essence of social media. In the flick "Payanigal Gavanikkavum" Vidharth and Karunakaran play a vital, Cinematograph of the film was Pandikumar and the music was composed by Shamnath Nag. The title "Payanigal Gavanikkavum” impact on the travelling sequence of a guy, whose life mess up with woe.    Ezhilan (Vidharth) and Antony (Karunakaran) both of their lifestyles were distinctive; Ezhilan leads a happy life with his wife Tamizhselvi. Simultaneously, Antony is a guy that he always keeps an attitude of sharing the visuals in the social media, whichever happens in his surroundings. In a fatigued situation, Ezhilan struck up with dormant condition and this was noticed by Antony. Now the peculiar fellow was taking a click of an innocent man Ezhilan's sleeping

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

Image
 திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்' திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்' பார்வையாளர்களை பரவசப்படுத்திய 'ஆஹா'வின் முதல் ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்' ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன

*சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*

Image
  *சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*   முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த  அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.   பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில

*தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் - கலைப்புலி எஸ்.தாணு*

Image
  *தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் - கலைப்புலி எஸ்.தாணு* *வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு* *தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ்* கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம

அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!

Image
 அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?! அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்' என குறிப்பிட்டு, 'ஓ மை டாக்' படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். 'ஓ மை டாக்' திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம். 1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..! 'ஓ மை டாக்' - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருக்கிறது
Image
  *Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham*  The film is directed by Arun Matheswaran and produced under the banner of Screen Scene Media Entertainment, featuring Keerthy Suresh and Selvaraghavan in the lead roles  Prime members can watch the film in Tamil, Telugu and Malayalam on Prime Video starting 6 May MUMBAI, India— 26 April, 2022 —Prime Video today unveiled the trailer of Arun Matheswaran’s upcoming Tamil revenge action-drama, Saani Kaayidham. Produced under the banner of Screen Scene Media, the film stars Keerthy Suresh and Selvaraghavan in the lead roles. Saani Kaayidham will premiere exclusively on Prime Video starting 6 May, and will also be available as Chinni in Telugu and as Saani Kaayidham in Malayalam across 240 countries and territories.  The story follows a heart-wrenching journey of Ponni (Keerthy Suresh) who works as a constable and lives with her five-year-old daughter Dhanna and her husband Maari, who works as

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

Image
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையா

இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ளது.

Image
  இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால்  அமைக்கப்பட்டுள்ளது.   டிபி புரொடக்‌ஷன்ஸ் (DB Productions) நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் பணியாற்றி வரக்கூடிய மிகுந்த அனுபவம் கொண்ட நிறுவனமாகும். 100க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள், 30 ஹாலிவுட் படங்கள், 1000க்கும் அதிகமான விளம்பர படங்களில் டிபி புரொடக்ஷன்ஸ் பணியாற்றியுள்ளது. மேலும் கேமிங் துறையிலும் பல புதிய ஆப்களை உருவாக்கி இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ். அமெரிக்காவின் விசுவல் எபெக்ட் சொசைட்டியில் உறுப்பினராக இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ். இந்நிலையில் டிபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான இண்டெலி ஸ்டுடியோஸ் ( Intelli studios) தனது அடுத்த முயற்சியாக சென்னை பூந்தமல்லியில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 13000 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்

*சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’*

Image
*சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’* *இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’* *படப்பிடிப்புடன் தொடங்கிய ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக்* *அக்ஷய்குமார் நடிப்பில் தொடங்கிய ‘சூரரைப்போற்று’ ஹிந்தி பதிப்பு* *சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா* நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில்  நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான ப

*எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.*

Image
  *எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.* ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.  'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுத

கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது " மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு...

Image
கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது " மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு... மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என்று காழ்ப்புணர்ச்சியில் பேசாதீர்கள்  " மெய்ப்பட செய் " இசை வெளியீட்டு விழாவில்  இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு... எஸ்.ஆர்.ஹர்ஷித்  பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து,  பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள்,  படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்