KALAIGNAR TV – GOWRI SERIALகனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
KALAIGNAR TV – GOWRI SERIAL
கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்காவுக்கு எதிராக சூழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ஆவுடையப்பன் குடும்பம் துர்காவை கொல்ல திட்டமிடுகிறது.
இந்த இக்கட்டான சூழலில், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் கடப்பா கனகா. முன்பு, துர்கா சிகிச்சையில் இருக்கும் போது, துர்காவாக ஆவுடையப்பனின் குடும்பத்தை ஆட்டி படைத்த கனகா, மீண்டும் வந்திருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால் தொடர் இனி பரபரப்பாக நகரும்.
Comments
Post a Comment